ரஜினியின் உண்ணாவிரதத்தை நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்: ராமதாஸ்
மதுரை:
ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து நடிகர்களும் புறக்கணிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்துக்குத் தண்ணீர் தராத அம் மாநில முதல்வர் கிருஷ்ணாவால் வாய் நிறையப் பாராட்டப்படுகிற ரஜினி நடத்தும்போராட்டத்தை நடிகர்கள் ஆதரிக்கக் கூடாது.
இதில் விஜய்காந்த் பெருந்தன்மை காட்டக் கூடாது. எல்லோரும் சேர்ந்து ஒரு போராட்டத்தை நடத்தும்போது இவர் மட்டும்தனியே போய் உண்ணாவிரதம் உட்காருவது தமிழர் ஒற்றுமையை திட்டமிட்டு சீர் குலைக்கும் செயல்.
இதனால் அவரது நாளைய உண்ணாவிரதத்தை அனைத்து நடிகர்களும் புறக்கணிக்க வேண்டும். தமிழ் பற்று உள்ளநடிகர்களாவது அதைப் புறக்கணிக்க வேண்டும்.
தமிழகத்தை அவமதித்து, உச்ச நீதிமன்றத்தையும் அவமதித்த கிருஷ்ணாவை முதல்வர் பதவியில் இருந்து சோனியா காந்தி நீக்கவேண்டும். அங்கு கிருஷ்ணா ஆட்சியைக் கூட கலைக்கலாம். ஆனால், அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஆதரவுவேண்டும். அதற்குப் பதிலாக கிருஷ்ணாவை சோனியா நீக்கிவிடலாம் என்றார் ராமதாஸ்












Click it and Unblock the Notifications