பஸ்கள் செலவை ஏற்ற ஜெ.
நெய்வேலி:
நெய்வேலி செல்ல நடிகர் சங்கத்தினர் நேற்று புக் செய்த 140 சொகுசு பஸ்களுக்கான கட்டணத்தையும் தனது சொந்த செலவில்ஏற்றுக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று விஜய்காந்திடம் ஜெயலலிதா இதனைத் தெரிவித்தார்.
இயக்குனர்கள் சென்ற பஸ் மதுராந்தகம் அருகே டயர் பஞ்சராகி நின்றுவிட்டது. இதையடுத்து உடனே மாற்று பஸ் ஏற்பாடுசெய்தனர் போலீசார்.
பஸ்சின் மேல் கூரையில் உட்கார்ந்து கொண்டு சென்றார் வடிவேலு. அவருடன் சார்லியும் உட்கார்ந்திருந்தார்.
நெய்வேலியில் விஜய்காந்துக்கு அவரது ரசிகர்கள் கட்-அவுட் வைத்திருந்தனர். ஊர்வலத்தில் வந்த விஜய்காந்திடம் நிருபர்கள்ரஜினியின் உண்ணாவிரதம் குறித்து கேட்க, அய்யோ, இதை எத்தனை தடவை கேப்பீங்க. நான் எத்தனை தடவை பதில் சொல்றதுஎன்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டார்.
பாரதிராஜாவை இடைமறித்த ஹிந்தி சேனல் நிருபர்கள் ரஜினி குறித்து கேட்க, அவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் தந்தார். திஸ் இஸ்என் எபர்ட் டு டிவைட் தமிழ்ஸ் என்றார் உணர்ச்சிவசப்பட்டவராய்.
நெய்வேலியில் காலையில் இருந்தே சாலையின் இருபுறமும் நடிகர்களைக் காண மக்கள் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.
அனைத்து பஸ்களின் முன்பும் கலை உலகின் காவிரிப் போராட்டம் என்ற கருப்பு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications