தமிழனின் ரத்தம் தான் நெய்வேலி மின்சாரம்: மணிவண்ணன்
நெய்வேலி:
தமிழகத்தின் இயற்கை வளமான நிலக்கரியால் கிடைக்கும் மின்சாரத்தை அனுபவிக்கும் கர்நாடகம் காவிரியில் நீர் தந்து தான்ஆக வேண்டும் என இயக்குனர் மணிவண்ணன் கூறினார்.
அவர் பேசுகையில், காவிரியில் தண்ணீர் இயற்கையால் கிடைக்கிறது. அதில் தமிழகத்துக்கு முழுப் பங்கு உண்டு.
ஆனால், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழர்கள் சிந்தும் வியர்வையால் தான் உருவாகிறது. ரத்தம் சிந்தி நிலக்கரிவெட்டி எடுப்பவன் தமிழன். அதில் தான் இந்த மின்சாரம் தயாராகிறது. இது சும்மா கிடைத்துவிடவில்லை.
தமிழகத்தின் இயற்கை வளத்தை வெட்டி எடுத்து எரித்து மின்சாரம் தயாரித்து கர்நாடகத்துக்குத் தந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் மழையால் இயற்கையாகக் கிடைக்கும் நீரைத் தடுத்து வைத்துக் கொண்டுதமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது கர்நாடகம்.
எங்கள் இயற்கை வளத்தை அனுபவிக்கும் நீ எங்களுக்கு நீரைத் தந்து தான் ஆக வேண்டும். அது கர்நாடகத்தின் கடமை என்றார்மணிவண்ணன்.












Click it and Unblock the Notifications