ரஜினி உண்ணாவிரதம்: சைட் லைட்ஸ்
சென்னை:
ரஜினி உண்ணாவிரதம் அமர்ந்திருக்கும் மேடையில் பின்னால் கருப்புத் துணி கட்டப்பட்டுள்ளது.
அதில் கொட்டை எழுத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது. மேலும் மகாத்மாகாந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப் படங்களும் அந்தத் துணியில் ஒட்டப்பட்டிருந்தன.
ரஜினியை சந்திக்க வரும் தலைவர்கள், நடிகர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றனர். உடனே அதை பின்னால் இருக்கும்ஒருவர் உருவி அகற்றுகிறார்.
அடிக்கடி தனது கைக் கடிகாரத்தில் உள்ள தனது குருஜியின் படத்தைப் பார்த்துக் கொள்கிறார் ரஜினி.
முகத்தில் எந்தவிதமான சலனமும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருக்கிறார் ரஜினி. தன்னை சந்திக்க வருபவர்களுக்கு மட்டும்ஒரு கும்பிடு போட்டுவிட்டு சிரிக்கிறார்.
நீட்டாக ஷேவ் செய்து வெள்ளை நிற உடையில் வந்து அமர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.
தூரத்தில் தடுப்புக் கட்டைகளுக்கு அந்தப் புறமாக நின்றுள்ள ரசிகர்கள் அவரை நோக்கி வாழ்த்துக் கோஷம் போட்டபடிஉள்ளனர். ஆனால், அதை அமைதியாக பார்த்தபடி தான் ரஜினி உள்ளார். அவர்களை நோக்கி கை அசைக்கவில்லை.
ரஜினியின் இந்த உண்ணாவிரதத்தை கர்நாடகம் கூர்ந்து கவனிக்கும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications