காவிரி விவகாரம்: வேலூர் சிறையில் வைகோ உண்ணாவிரதம்
வேலூர்:
தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கடந்த ஜூலை 11ம் தேதி வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழகத்திற்குக் காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடாததைக் கண்டித்து வைகோ சிறைக்குள்ளேயேஉண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
காவிரியில் உடனடியாக நீர் திறந்துவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அவர் இந்த உண்ணாவிரதத்தைமேற்கொண்டுள்ளார்.
வைகோவுடன் சுமார் 3,000 கைதிகளும் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலைவழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோரும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை வரை நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வயதான, உடல் நிலை பாதிக்கப்பட்ட கைதிகள்மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசைத் தவிர அனைத்து அரசுகளுமே தமிழகத்திற்குதுரோகம் செய்து வந்துள்ளன.
தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தை உச்ச நீதிமன்றம் நன்றாகப் புரிந்து கொண்டு தான் அப்போதிலிருந்துஇப்போது வரை தீர்ப்பு வழங்கி வருகிறது. அதன் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிடாமல் வேறு யார் உத்தரவிடுவார்கள்?
காவிரி விவகாரத்தில் சில கட்சித் தலைவர்கள் திரையுலக நட்சத்திரங்களைத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் கட்சியைக் கலைத்து விட்டுப் பேசாமல் இருக்கலாம்.
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள வைகோ உள்ளிட்ட அனைத்து மதிமுகவினர் மீதும்குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போதே நாங்கள் "பொடா" சட்டத்தை நசுக்கி எறிவோம் என்றார்கணேசன்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications