காவிரி விவகாரம்: வேலூர் சிறையில் வைகோ உண்ணாவிரதம்
வேலூர்:
தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கடந்த ஜூலை 11ம் தேதி வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழகத்திற்குக் காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடாததைக் கண்டித்து வைகோ சிறைக்குள்ளேயேஉண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
காவிரியில் உடனடியாக நீர் திறந்துவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அவர் இந்த உண்ணாவிரதத்தைமேற்கொண்டுள்ளார்.
வைகோவுடன் சுமார் 3,000 கைதிகளும் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலைவழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோரும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை வரை நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வயதான, உடல் நிலை பாதிக்கப்பட்ட கைதிகள்மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசைத் தவிர அனைத்து அரசுகளுமே தமிழகத்திற்குதுரோகம் செய்து வந்துள்ளன.
தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தை உச்ச நீதிமன்றம் நன்றாகப் புரிந்து கொண்டு தான் அப்போதிலிருந்துஇப்போது வரை தீர்ப்பு வழங்கி வருகிறது. அதன் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிடாமல் வேறு யார் உத்தரவிடுவார்கள்?
காவிரி விவகாரத்தில் சில கட்சித் தலைவர்கள் திரையுலக நட்சத்திரங்களைத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் கட்சியைக் கலைத்து விட்டுப் பேசாமல் இருக்கலாம்.
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள வைகோ உள்ளிட்ட அனைத்து மதிமுகவினர் மீதும்குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போதே நாங்கள் "பொடா" சட்டத்தை நசுக்கி எறிவோம் என்றார்கணேசன்.












Click it and Unblock the Notifications