தமாகா பெயரை பயன்படுத்தினால்... காங்கிரஸ் எச்சரிக்கை
சென்னை:
குமாரதாஸ் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெயரையும், கொடியையும்பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. ஞானதேசிகன் கூறுகையில்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெயரை தேர்தல் கமிஷன் பதிவேட்டிலிருந்து நீக்கி விட்டதாக தேர்தல் கமிஷன்தெரிவித்துள்ளது. எனவே தமாகாவின் பெயர், சின்னம், கொடியை, தமிழகத்திலும், புதுவையிலும் யாரும்பயன்படுத்த முடியாது.
குமாரதாஸ் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தங்களை தமாகா எம்.எல்.ஏக்கள் என்று கூற முடியாது. மீறிசெயல்பட்டால் தேர்தல் கமிஷனின் கடுமையான நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும். விளைவுகள்கடுமையாகவே இருக்கும்.
அந்த ஐந்து எம்.எல்.ஏக்களும் காங்கிரஸில் சேர வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு சேர முன் வந்தால்நாங்கள் வரவேற்போம், மகிழ்ச்சி அடைவோம் என்றார் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications