மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தமிழகத்தில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணைக்குநீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 40.93 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6,916 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
அணையிலிருந்து விநாடிக்கு 6,071 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே பலத்த மழை காரணமாக கர்நாடக அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அந்த அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications