குற்றச் செயல்களைத் தடுக்க திருச்சியில் ரகசிய கேமராக்கள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக இந்நகரின் முக்கியப் பகுதிகளில் ரகசிய கேமராக்களைப் பொருத்தகாவல்துறை முடிவு செய்துள்ளது.
திருச்சி மாநகர துணை கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையில் பொதுமக்கள், காவல்துறை அதிகாகள்ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது குற்றச் செயல்களைத் தடுப்பதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மலைக்கோட்டை நுழைவாயில், காந்தி பஜார் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரகசியகேமராக்களைப் பொருத்தி குற்றச் செயல்களை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்கவும் இந்தக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.
சென்னை நகரின் சில இடங்களில் இதுபோன்ற முறை ஏற்கனவே அமலில் இருப்பதை சுட்டிக் காட்டிய போலீஸ்அதிகாரிகள், திருச்சியிலும் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications