புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் "ஏர் ஹார்ன்" ஒலிக்க தடை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் காற்றொலிப்பானுக்கு (ஏர் ஹார்ன்) முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து காற்றொலிப்பான் இல்லாத மாவட்டமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது.
விராலிமலை அருகே உள்ள மத்தூர் கிராமத்தில் நடந்த விழாவின் போது மாவட்ட கலெக்டர் மக்வானா இதைஅறிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கனரக வாகனங்களிலும் காற்றொலிப்பான் அகற்றப்பட்டு விட்டது.
மேலும் மாவட்டத்திற்குள் வந்து செல்லும் வாகனங்களும், காற்றொலிப்பானை பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காற்றொலிப்பானை பயன்படுத்துவோருக்கு முதல் தடவை என்றால் ரூ.6,000 அபராதமும், மீண்டும் அதே தவறைசெய்தால் ரூ.9,000 அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் திடீர் திடீரென்று எழுப்பும் இந்த "ஏர் ஹார்ன்" ஒலியால், "சும்மா"உட்கார்ந்திருக்கும் சில பெரியவர்கள் கூட பதறிப் போவார்கள்.
அப்படி இருக்கும் போது, வாகனங்களில் பெற்றோரின் மடியில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும்குழந்தைகளின் நிலை பற்றி சொல்லவே வேண்டாம்.
பல சமயங்களில் டிரைவர்கள் பலத்த வேகத்துடன் வாகனங்களைச் செலுத்துவதோடு நில்லாமல், தாளத்தோடு இந்த"ஏர் ஹார்னை" ஒலிக்க விடுவார்கள். இதனால் சாலைகளில் சென்று கொண்டிருப்பவர்களின் காது ஜவ்வு கிழியாதகுறை தான்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதுமே இதை அமல் படுத்தினால் நல்லது.தமிழக அரசு செவி கொடுக்குமா?