சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு
சென்னை:
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் இன்று அதிகாலை பயங்கர இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்குபலத்த மழை கொட்டியது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாக சென்னை நுங்கம்பாக்கம்வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.
திடீர் மழை காரணமாக சென்னை மாநகரின் பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருளில்மூழ்கியது. பல சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இருளாக இருந்ததாலும், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதாலும், வாகனங்கள் செல்வதில் பெரும்சிக்கல் ஏற்பட்டது.
பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள குடிநீர் தேக்கஏரிகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
இந்த மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications