ஆசிரியர் அல்லாத அரசு கல்லூரி ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பு
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளப் போவதாக அரசுக்கல்லூரி ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து ஆசிரியர்களும், மாணவர்களும் போராடிவருகிறார்கள்.
பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் தற்போது அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர் அல்லாதஊழியர்களும் குதிக்கவுள்ளனர்.
இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்ரணியன் கூறுகையில்,
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் சேர்த்தால் அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். எங்களதுநிலை மிகவும் மோசமாகி விடும். அரசு ஊழியர் என்ற அடையாளமே இல்லாமல் போய் விடுவோம்.
எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து நாங்களும் போராட உள்ளோம்.
வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும், ஆய்வக ஊழியர்களும்கலந்து கொள்ளவுள்ளோம் என்றார் சுப்ரமணியன்.












Click it and Unblock the Notifications