மதமாற்ற தடை சட்டம் ஜெ. கையில் இருக்கக் கூடாது: இளங்கோவன்
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் முதல்வர் ஜெயலலிதா கையில் இருக்கக் கூடாது. அதை அவர் தவறாகப்பயன்படுத்துவார் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது. இது தேவையற்றதும் கூட.
வேண்டாதவர்களை பழி வாங்குவதற்கே இந்த சட்டத்தை அதிமுக அரசு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.
ஜெயலலிதா இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவார். சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதே அவரதுவழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே இந்தச் சட்டம் ஜெயலலிதாவின் கையில் இருப்பது ஆபத்து. உடனடியாக இதை வாபஸ் பெற வேண்டும்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அப்போதுகாங்கிரஸ் கட்சியின் புதிய சட்டசபை தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications