முரசொலி மாறன் தொடர்ந்து சீரியஸ்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் தான் அளிக்கப்பட்டு வருகிறது.
இருதய வால்வில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்மாறன். அவரது உடல் நிலையில் சில தினங்களுக்கு முன் லேசான முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக திடீரென அவருடைய உடல் நிலை மோசமடைந்தது.
தற்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரது உடல் நிலைதீவிரமாக கண்காணிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் தொலைபேசி மூலம் அப்பல்லோமருத்துவனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் தொடர்பு கொண்டு மாறனின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications