துரைமுருகன் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
வேலூர்:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடிசோதனை நடத்தி வருகின்றனர்.
துரைமுருகன், அவரது மனைவி, மகன், மகள்கள் மற்றும் உதவியாளர்கள் மீது வருமானத்திற்கு மீறி சொத்துசேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உள்ளதுரைமுருகனின் வீடுகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
மேலும் துரைமுருகனின் உறவினர்களின் வீடுகளிலும் அதே நேரத்திலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைமேற்கொண்டனர்.
இதுவரை முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை. அனைத்துஇடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
என் மீது தொடரப்படும் எந்த வழக்கையும் சந்திக்கத் தயார் என்றும் பொதுவாழ்வில் நான் பெற்றிருக்கும்புகழுக்கும் நற்பெயருக்கும் வேண்டுமென்றே திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கோடுயாரோ புகார் கொடுத்துள்ளனர் என்றும் சமீபத்தில் தான் துரைமுருகன் அறிக்கை விடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.