கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்க சாலை பணியாளர்கள் முடிவு
சென்னை:
பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள 10,000 சாலைப் பணியாளர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வரும் 25ம் தேதிதலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 10,000 சாலைப் பணியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சாலைப் பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தமிழகம் முழுவதிலும் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அவர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.வரும் 19ம் தேதி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இதற்கும் அரசு செவி சாய்க்காவிட்டால், வருகிற 25ம் தேதி சென்னையில் உள்ள கோட்டை (தலைமைச் செயலகம்)முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அந்தப் போராட்டத்தில் 10,000 சாலைப் பணியாளர்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications