For Daily Alerts
Just In
தமிழ் படங்களை திரையிட வேண்டும்: கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநில முதல்வர்கிருஷ்ணாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரிப் பிரச்சனையில் தற்போது அமைதி நிலவத் தொடங்கியிருப்பதையடுத்து கர்நாடகத்தில் தமிழ்ப்படங்களைத் திரையிட வேண்டும் என்று சமீபத்தில் தான் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் கிருஷ்ணாவுக்கே அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது.
எனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் தமிழ்ப் படங்களை மீண்டும் திரையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று அக்கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
Comments
Story first published: Friday, October 18, 2002, 5:30 [IST]