கர்நாடக ஆளுநரிடம் தமிழர் சங்கம் மனு
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ் டி.வி. சேனல் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று போலீசாரே உத்தரவிட்டுள்ளதை எதிர்த்துகர்நாடக மாநில ஆளுநர் சதுர்வேதியிடம் கர்நாடக தமிழர் சங்கம் புகார் கொடுத்துள்ளது.
கர்நாடக தமிழர் சங்கத் தலைவர் ராமன் இது தொடர்பாக ஆளுநரிடம் அளித்துள்ள புகார் மனுவில்,
காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசின் நிலைக்கு தான் அம்மாநிலத் தமிழர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
ஆனால் கர்நாடகத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் தமிழ் டி.வி.சேனல்களை நிறுத்துமாறு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கன்னட வெறியர்கள் மிரட்டி வருகின்றனர்.
தற்போது கன்னட வெறியர்களுக்குப் போலீசாரும் துணை போயுள்ளனர். தமிழ் டி.வி. சேனல்களை ஒளிபரப்பக்கூடாது என்றும் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது என்றும் போலீசாரே உத்தரவிட்டிருப்பது மிகவும்கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் இந்தச் செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.கர்நாடகத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தமிழ் சேனல் ஒளிபரப்புகளை மீண்டும் உடனடியாகத் தொடங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றுஅம்மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications