தமிழில் குடமுழுக்கு செய்த சிவாச்சாரியார்களுக்கு வக்கீல் நோட்டீஸ்
கரூர்:
கரூர் மாவட்டம் திருக்கூடலூரில் தமிழில் குடமுழுக்கு நடந்த சிவன் கோவில் கருவறைக்குள் நுழைந்து தீட்டுஏற்படுத்தியதாக சிவாச்சாரியார்கள் சிலருக்கு கோவில் தக்காரின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திருக்கூடலூரில் கடந்த மாதம் 9ம் தேதி தமிழில் குடமுழுக்கு விழா நடந்தது. பலத்த எதிர்ப்புகளையும்சர்ச்சைகளையும் மீறி தமிழிலேயே மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா வெற்றிகரமாக நடந்தது.
இதனால் கோவிலில் தீட்டு ஏற்பட்டு விட்டதாகக் கூறி பிராமணர்கள் கோவிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர்.
தமிழில் மந்திரம் சொல்வதா என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கூற,தமிழில் மந்திரம் கூறியதில் என்ன தவறு என்று திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட சில அரசியல்வாதிகளும்தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
இதனால் தமிழகம் முழுவதும் இந்தக் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது.
கோவில் கருவறைக்குள் சிவாச்சாரியார்கள் நுழைந்து, சுவாமி விக்கிரகத்தைத் தொட்டு விட்டதால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாக கூறி தமிழில் மந்திரம் ஓதி குடமுழுக்கு செய்த சிவாச்சாரியார்களுக்கு கோவில் தக்கார் முனுசாமியின்வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் சிவாச்சாரியார்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய குழப்பம் கரூரில்மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.