""கொஞ்சம் அடக்கி வாசிங்க"": ராமதாசுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை
சென்னை:
நடிகர்களை விமர்சித்து வருவதை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்என்று தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கையுடன் கலந்த கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கலையும், அரசியலும் தமிழகத்தில் பிரிக்க முடியாதவை என்பது வரலாறு. கடந்த காலத்தில் அரசியலில் முத்திரைபதித்தவர்களான அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., வி.என். ஜானகி ஆகியோர் முதல் இப்போதையஜெயலலிதா வரை அத்தனை பேரும் கலையுலகிற்கு சொந்தமானவர்கள்.
இவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் ராமதாஸ் மறந்து விடக் கூடாது.
தனிப்பட்ட முறையில் நடிகர்களை விமர்சிக்கும் போக்கை ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ரசிகர் மன்றங்களைக் கலைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறுவது நியாயமற்றது. அப்படி கூற அவருக்கு எந்தவிதஉரிமையும் இல்லை என்று நடிகர் சங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்த்தை டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல,தமிழகத்தில் எந்த நடிகருக்கும் ரசிகர் மன்றமே இருக்கக் கூடாது என்றும் அவர் கூறி வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.