சட்டசபை காங். தலைவர் யார்?: கலகலக்கும் கோஷ்டி மோதல்- சோனியா கையில் முடிவு
சென்னை:
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பதில் அக்கட்சியின்எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்த முடிவு எடுக்கப்படாத காரணத்தால், கட்சித் தலைவரான சோனியா காந்தியேஅவரைத் தேர்ந்தெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமாகாவிலிருந்து வந்து காங்கிரசில் இணைந்த அதன் தலைவருக்கு அகில இந்தியப் பொதுச் செயலாளர் பதவியும்,சோ. பாலகிருஷ்ணனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர்கள் நொந்து போயுள்ளனர். எனவே சட்டசபை காங்கிரஸ் தலைவர்பதவியையாவது தாங்களே கைப்பற்றிவிட வேண்டும் என்று இவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர்.
இணைப்புக்கு முன்பு சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்த யசோதா அந்தப் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளநினைக்கிறார்.
ஆனால் சட்டசபை தமாகா தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தைத் தான் இப்பதவியில் நியமிக்கவேண்டும் என்று வாசன் விரும்புகிறார். தற்போதைய காங்கிரஸ் செயல் தலைவரான இளங்கோவனும் இதைஆமோதித்துள்ளார். காரணம்- இவருக்கு யசோதாவைப் பிடிக்காது.
மேலும் தமாகாவிலிருந்து வந்த 18 எம்.எல்.ஏக்களால் தான் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும்பிரம்மாண்டமான 25ஐத் தொட்டிருக்கிறது. எனவே தமாகாவிலிருந்து வந்தவரைத் தான் சட்டசபை காங்கிரஸ்தலைவராக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரான ரமேஷ் சென்னிதாலா தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வாசன், சோ.பா. மற்றும் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். காங்கிரசில்வழக்கமாகத் தலைதூக்கும் கோஷ்டி மோதல் எதிர்பார்த்தது போலவே இன்றும் எட்டிப் பார்த்தது.
ஒவ்வொரு எம்.எல்.ஏவாகத் தனியாக அழைத்து ரமேஷ் சென்னிதாலா பேசிப் பார்த்தார். ஆனால் ஒவ்வொருவரும்ஒவ்வொருவரின் பெயரையும் பரிந்துரை செய்யவே அவர் கூட மிகவும் குழம்பிப் போய்விட்டார்.
இதனால் சட்டசபை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அக்கட்சி எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்த கருத்துஎழாமல் போய்விட்டது. இதையடுத்து கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் சென்னிதாலா பேசுகையில்,
யசோதா, எஸ்.ஆர்.பி. தவிர எஸ்.ஜி. வினாயகமூர்த்தி, சி. ஞானசேகரன், எச்.எம். ராஜு ஆகியோர் பெயர்களையும்சட்டசபை தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏக்கள் கூறினர்.
வரும் 24ம் தேதி தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. அதனால் சட்டசபை காங்கிரஸ் தலைவர்யார் என்பதை நாளைக்கே (23ம் தேதி) சோனியா அறிவித்து விடுவார்.
அதிருப்தி எம்.எல்.ஏக்களான ஐந்து பேரும் தமிழக சட்டசபையில் தமாகா உறுப்பினர்களாகவே நீடிப்பார்கள் என்றுசபாநாயகர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நாங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார் சென்னிதாலா.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications