அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
சென்னை:
அரசுக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தேர்வு முடியும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்று கோரி மாணவர்கள் போராட்டம்நடத்தி வந்தனர்.
சமீபத்தில் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். தங்களது போராட்டத்தையும் மீறிகல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் அரசு இணைத்ததையடுத்து இந்த முடிவை அவர்கள் எடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது மாணவர்களும் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். தேர்வுகள்நெருங்கி வருவதால் அதை மனதில் கொண்டு தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாணவர்கள்தெரிவித்தனர்.
இது தொடர்பான முடிவு பல்வேறு மாணவர் சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மாணவர்களைத் தாக்கியபோலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முழுமையாக பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரேதேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மாணவர்கள் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications