தமிழகத்துக்கு உடனே நீர் விட உச்ச நீதிமன்றம் உத்தரவு: கர்நாடகத்தில் மீண்டும் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்துக்கு உடனே நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்துக்கு நீர் விட மறுத்த கர்நாடகத்தை ஒரு பிடி பிடித்த தலைமை நீதிபதி கிர்பால் தலைமையிலானடிவிஷன் பெஞ்ச் தமிழகத்துக்கு உடனே நீர் விட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்று பேசிய கர்நாடக அரசு ஆட்சியை விட்டுவிலகி விடலாம் என்றும் நீதிபதிகள் கோபத்துடன் கூறினர்.

மீண்டும் போராட்டம் தொடக்கம்:

தமிழகத்குக்கு நீர் விடுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தையடுத்து மாண்டியாவிலும் மைசூரிலும் பெங்களூரிலும் மீண்டும்போராட்டத்தைத் தொடங்க விவசாயிகளும் கன்னட வெறி அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.

மைசூரிலும் மாண்டியாவில் கடந்த இரு மாதங்களாகவே கடையடைப்பு, சாலை மறியல், பள்ளிகள் மூடல், தமிழகவாகனங்களைத் தாக்குவது என போராட்டங்கள் நடந்து வந்தன. கடந்த வாரம் தான் அமைதி திரும்பியது.

இந் நிலையில் தமிழகத்துக்கு நீர் விட வேண்டும் என்ற உத்தரவை முதல்வர் கிருஷ்ணா நிறைவேற்றினால் மீண்டும்போராட்டத்தைத் தொடங்குவோம் என விவசாயிகள் சங்கத் தலைவர் மாடே கெளடா கூறினார்.

தமிழகத்துத்கு எக்காரணம் கொண்டும் நீர் விடக் கூடாது. அதனால் ஏற்படும் எந்த விளைவையும் சந்திப்பேன் என்று கிருஷ்ணாஉறுதியளித்திருந்தார். அதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றார் கெளடா.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து மாண்டியாவில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+