சட்டசபை காங். தலைவரானார் எஸ்.ஆர்.பி.
சென்னை:
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவராக எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பியின் நியமனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஅறிவித்தார்.
மேலும் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக யசோதா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இவ்வளவுநாட்களும் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செயலாளராக ஞானசேகரனும், கொறடாவாக எச்.எம். ராஜுவும், பொருளாளராக ஜெயக்குமாரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டது குறித்த கடிதத்தை, சட்டசபை செயலாளர்ஜானகிராமனிடம் கொடுத்தார் எஸ்.ஆர்.பி.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான ரமேஷ் சென்னிதாலா ஒவ்வொருகாங்கிரஸ் எம்.எல்.ஏவிடமும் தனித் தனியாக ஆலோசனை நடத்திப் பார்த்தார்.
ஆனால் சட்டசபை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து அக்கட்சி எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்தகருத்து ஏற்படவில்லை. இதையடுத்து இந்தப் பொறுப்பை சோனியா காந்தியிடமே சென்னிதாலா விட்டுவிட்டார்.
அதன்படி தான் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 14ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைக்கப்பட்ட பின்னர், வெறும் 7 எம்.எல்.ஏக்களைமட்டுமே கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 25 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications