பணிக்கு சென்றவர்களை தடுத்த அரசு ஊழியர்கள் நீக்கம்
மதுரை:
அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்வதைத் தடுத்த போராட்டக் குழுவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை சஸ்பெண்ட் செய்யவும்தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போனஸ், டி.ஏ. உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
ராமநாதபுரத்தில் பணிக்கு சென்ற ஒரு பிரிவு ஊழியர்களை தடுத்த மாவட்ட வருவாய்துறை ஊழியர் சங்க தலைவர் சுந்தர மூர்த்தி உள்பட 6 பேரை போலீசார்கைது செய்தனர். இவர்களை சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே போல சிவகங்கையிலும் பணிக்கு சென்ற அரசு ஊழியர்களை தடுத்ததாக மாவட்ட அரசு அலுவலர் சங்க துணை தலைவர் கல்லாண் கைது செய்யப்பட்டார்.
அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா தயாராக இருப்பதாகவும் ஆனால், அதற்கு முன் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும்அரசு நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications