For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதியாக நடந்த தேவர் குருபூஜை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 95வது பிறந்த தினம் மற்றும் 40வதுநினைவு தினம் ஆகியவை அடங்கிய குருபூஜை நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.

பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சமாதியில், அமைச்சர்கள் வ.து. நடராஜன், ராதாகிருஷ்ணன், டி.டி.வி.தினகரன், மலைச்சாமி, நடிகர் எஸ்.எஸ். சந்திரன், தங்க தமிழ்ச்செல்வன், செல்வ கணபதி, கோகுல இந்திரா,முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், தா. கிருஷ்ணன், பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர்குழந்தைவேலு, சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன் கிராம நுழைவாயிலில் வல்லரசு பிரிவு பார்வர்ட் பிளாக் தொண்டர்களுக்கும், சந்தானம் பிரிவுபார்வர்ட் பிளாக் தொண்டர்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

குருபூஜைக்கு முந்தைய நாள் தேவர் ஜோதி எடுத்துச் செல்லப்படும் போது மானாமதுரையில் மட்டும் வன்முறைஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X