சிறைக்குள் 100 நாட்களில் 200 புத்தகங்கள் படித்த வைகோ
வேலூர்:
கைதாகி 100 நாட்களுக்கு மேலாகியும் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ அதே சுறுசுறுப்புடன் வேலூர்சிறைக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிவகாசி தொகுதியின் எம்.பியுமான வைகோவைச் சந்தித்து விட்டு வந்த அவருடைய கட்சிப் பிரமுகர்கள்கூறியதாவது:
சிறையில் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகிறார். ஆனால் அவர் அடைக்கப்பட்டுள்ள தனியறையை காலை 6மணிக்குத் தான் சிறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள்.
அதனால் அதுவரை அவர் புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொண்டே இருப்பார்.
பின்னர் 6 மணிக்குக் கதவு திறக்கப்பட்டதும் மளமளவென்று சிறைக்குள்ளேயே "வாக்கிங்" கிளம்பி விடுகிறார்.
காலைக் கடன்களை முடித்த பின்னர் 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பார்வையாளர்களைச் சந்திக்கிறார்.தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மீண்டும் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் பேசுகிறார்.
தன்னைச் சந்திக்க வருபவர்கள் எதைக் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் வைகோ, புத்தகங்களை மட்டுமேகொடுங்கள் என்று கேட்டுக் கேட்டு வாங்கிக் கொள்வார்.
இதையடுத்து வளாகத்திற்குள்ளேயே மற்ற கைதிகளுடன் சேர்ந்து கொண்டு வாலிபால் விளாைடுகிறார்.
விளையாட்டை முடித்து விட்டு வைகோ தன்னுடைய அறைக்குத் திரும்ப, சரியாக மாலை 6 மணிக்கு அந்த அறைபூட்டப்படுகிறது.
தன்னைச் சந்திக்க வருபவர்களிடமிருந்து மட்டும் இதுவரை அவர் சுமார் 400 புத்தகங்களைப் பெற்றுள்ளார்.அதைத் தன்னுடைய அறையிலேயே வரிசையாக அடுக்கி வைத்துள்ளார்.
இரவு உணவை முடித்த பின்னர் தூங்கும் வரை படித்துக் கொண்டே இருப்பார் வைகோ. கிட்டத்தட்ட புத்தகப்புழுவாகவே மாறி விடுகிறார்.
படிப்பு... படிப்பு... படிப்பு... இது மட்டுமே தன்னுடைய முக்கியப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ள அவர் இந்த100 நாட்களில் சுமார் 200 புத்தகங்களைப் படித்துள்ளார் என்று மதிமுக பிரமுகர்கள் கூறினர்.
பொறுமையாகப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களுக்குக்கவலையே இல்லை என்பதை வைகோ நிரூபித்து வருகிறார்.
-->
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications