For Daily Alerts
Just In
அபிஷேகங்களால் தேய்ந்து போன உற்சவ சிலைக்கு மெல்லிய கவசம்
சென்னை:
பழனியாண்டவர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி உற்சவ சிலை அபிஷேகங்களால் தொடர்ந்து தேய்ந்துபோகாமல் இருக்க அதன் மேல் மெல்லிய கவசம் பொருத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பழனியாண்டவர் கோவில் உள்ளது.
இங்குள்ள தண்டாயுதபாணி உற்சவ சிலைக்கு நாள்தோறும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்துவருகின்றன. இந்தச் சிலை செய்யப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இவ்வாறு தொடர்ந்து அபிஷேகம் செய்து வருவதால் சிலை சிறிது சிறிதாகத் தேய்ந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து இந்தத் தேய்மானத்தைத் தடுத்து சிலையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் கூறிய ஆலோசனையின் படி தமிழக அரசுஎடுத்துள்ள முடிவுகளின் விவரம்:
- உற்சவ சிலையின் தேய்மானத்தைத் தடுக்க அந்தச் சிலைக்கு மெல்லிய கவசம் பொருத்தப்பட்டு, தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறும்.
- சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு உற்சவ சிலை விரைவில் செய்யப்படும்.
- தற்போதுள்ள உற்சவ மூர்த்தி வெளியிலுள்ள சன்னிதியில் நிறுவப்படும்.
- மூலவர் சிலைக்கும் உற்சவ சிலைக்கும் தொடர்ந்து அபிஷேகங்களும், பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும்.
- அபிஷேகத்திற்குத் தேவையான நீர் தூய்மைப்படுத்தப்படும்.
- "குமார தந்திரம்" என்ற ஆகம பயிற்சி பெற்ற கோவில் அர்ச்சகர்களுக்கு மறுபயிற்சி அளிக்கப்படும்.
Comments
Story first published: Monday, November 11, 2002, 5:30 [IST]