For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாறனை அமெரிக்கா கொண்டு செல்லும் சிங்கப்பூர் "ஏர் ஆம்புலன்ஸ்" சென்னை வந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நாளை காலை சிறப்பு "ஏர் ஆம்புலன்ஸ்" விமானம் மூலம் அமெரிக்காவுக்குக்கொண்டு செல்லப்படுகிறார்.

அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் இந்தச் சிறப்பு விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று பிற்பகல் 2மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.

இன்று இரவோ அல்லது நாளை காலையோ இவ்விமானத்தின் மூலம் மாறன் அமெரிக்கா கொண்டுசெல்லப்படுவார். மாறனுடன் அவருடைய மனைவி மல்லிகா, மகன் கலாநிதி மாறன், மகள் டாக்டர் அன்புக்கரசிமற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் சில டாக்டர்கள் ஆகியோரும் இவ்விமானத்தில் செல்வார்கள்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற "மெதடிஸ்ட்" மருத்துவமனையில் தான் மாறன் சிகிச்சைபெறவுள்ளார்.

பூஞ்சைத் தொற்று காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாறன்உயிருக்குப் போராடி வருகிறார். அவருடைய நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை மோசமாகப்பாதிக்கப்பட்டன.

இதையடுத்து பிரதமர் வாஜ்பாயுடன் திமுக தலைவரும் மாறனின் மாமாவுமாகிய கருணாநிதி தொலைபேசியில்பேசியதைத் தொடர்ந்து மாறனை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தான் சிங்கப்பூரிலிருந்து சிறப்பு "ஏர் ஆம்புலன்ஸ்" விமானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்துமருத்துவ வசதிகளும் கொண்டுள்ள இந்த விமானத்தில் சிகிச்சை பெற்றவாறே மாறன் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.

இந்த விமானத்திற்கான வாடகை மட்டும் ரூ.48 லட்சம் என்று கூறப்படுகிறது. மாறனின் அனைத்து சிகிச்சைசெலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X