மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வயது 100!
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் நிலையத்திற்கு 100வது வயது பிறந்து விட்டது.
சென்னையின் பிரபலமான பகுதியான மயிலாப்பூர் கச்சேரி சாலையில் காவல் நிலையம் அமைந்துள்ளது.
சிவப்பு செங்கற்களால் கம்பீரமாக அமைந்துள்ள இந்தக் காவல் நிலையம் துவங்கி 99 ஆண்டுகள் முடிந்து 100வது ஆண்டு பிறந்துள்ளது. இதையொட்டிஇந்தக் காவல் நிலையம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறு விழாவும் நடத்தப்பட்டது.
இந்தக் காவல் நிலையம் 1903ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் எல்லை மிக நீளமானது.
கடற்கரை முதல் தேனாம்பேட்டை வரையிலும், ராயப்பேட்டையிலிருந்து அபிராமபுரம் வரையிலும் இந்தக் காவல் நிலையத்தின் எல்லைகளாகஇருந்தன.
மயிலாப்பூர் காவல் நிலைய கட்டடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வடிவமைப்பிலேயே திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகியஇடங்களிலும் பின்னர் காவல் நிலையங்கள் கட்டப்பட்டன.
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் 2 உதவி ஆணையர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உள்ளனர்.
-->