சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் சாவுகள்: 2 டாக்டர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட்
சென்னை:
சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு சிறுமி இறந்ததைத் தொடர்ந்து2 டாக்டர்கள், 6 நிர்ஸுகள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் அடிக்கடி நோயாளிகள் இறப்பது அதிகரித்து வருகிறது.
உச்சகட்டமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் டாக்டர்களின் சரியானசிகிச்சை இல்லாமல் வயிற்றில் குழந்தையோடு பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து மேலும் ஒரு கர்ப்பிணிப்பெண்ணும் இறந்தார்.
இந்த நிலையில் ஒரு 6 வயது சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டாள்.அவளுக்கு டாக்டர்கள் ஊசி போட்ட சில நிமிடத்தில் அந்த சிறுமி மூச்சுத் திணறல் அதிகமாகி இறந்தாள்.
இந்த தொடர் சாவுகள் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சேலம் அரசு மருத்துவமனையில் எங்குபார்த்தாலும் லஞ்சம், லஞ்சம், லஞ்சம் தான். காசு கொடுத்தால் தான் வைத்தியம் பார்க்கிறார்கள் என்று பொதுமக்கள்கொந்தளிக்கத் தொடங்கினர்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண் மற்றும் சிறுமி சாவு தொடர்பாக பணியில் இருந்த 2டாக்டர்கள், 6 நர்ஸ்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சென்னை மற்றும் கோயம்புத்தூரிலிருந்து டாக்டர்கள் குழு சேலம்விரைந்துள்ளது.
இதற்கிடையே இரண்டு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதையடுத்து, சேலம் மாவட்ட அரசுமருத்துவர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று நடந்தது.
-->