தமிழகத்துக்கு ஆணையம் தான் ஒரே வழி: பா.ஜ.க.
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கு காவிரி நதி நீர் ஆணையத்தை அணுகுவதே தமிழகத்திற்குஒரே வழி என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்கு 155 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நடுவர் மன்றம், இது தற்காலிகமானதீர்வுதான் என்றும் நிரந்தரத் தீர்வு காண்பது பிரதமரின் கையில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
எனவே பிரதமர் தலைமையிலான ஆணையத்தின் மூலம் மட்டுமே இப்பிரச்சினை தீரும் என்ற நிலை உள்ளது.
எனவே பிரதமர் மீது நம்பிக்கை வைத்து ஆணையக் கூட்டங்களில் கலந்து கொண்டு, நமது உரிமையைக்கோருவது மட்டுமே தமிழக அரசின் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்க முடியும்.
இந்த விஷயத்தில் பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சரியான போக்குஅல்ல. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள அறிவுரையும் தெளிவாக்கியுள்ளது.
இந்த விஷயத்தில், தமிழக முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் கணேசன்.
இதே போல தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை மூலம் தமிழகத்திற்கு மாறாத அவமானத்தைத் தேடித் தந்துள்ளார் ஜெயலலிதா.
இதன் மூலம் முதல்வர் பதவிக்கும் மீண்டும் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. இது ஒருகரும்புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-->












Click it and Unblock the Notifications