"தேனியில் பெண் சிசுக் கொலை முற்றிலும் ஒழிப்பு"
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அம்மாவட்ட கலெக்டர் அதுல்ஆனந்த் கூறினார்.
உத்தமபாளையத்தில் நடந்த பெண் சிசுக் கொலை தடுப்பு முகாமைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
தேனி மாவட்டத்தில் 122 இடங்களில் சிசுக் கொலை தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர ஊராட்சி, நகராட்சி அளவில் சிசுக் கொலைத் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் தற்போது சிசுக் கொலையேஇல்லை எனும் அளவுக்கு ஒழிக்கப்பட்டு விட்டது என்றார் அதுல்ஆனந்த்.
-->












Click it and Unblock the Notifications