ம.பியில் பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து 27 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் திடீரென்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்ததில் 27பேர் உயிரிழந்தனர்.
ஹன்மானாவிலிருந்து பெஹ்ரி நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
சிதி மாவட்டம் ரீவா நகருக்கு 145 கி.மீ. தூரத்தில் சோனே ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போதுதிடீரென்று இந்த பஸ் நிலை தடுமாறி பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
ஆற்றில் அவ்வளவாகத் தண்ணீர் இல்லாத போதிலும் நல்ல உயரத்திலிருந்து தலைகீழாக பஸ் கவிழ்ந்துவிழுந்ததால் 27 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்ற பயணிகள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications