விபத்தில் உயிரிழந்த திருப்பூர் தம்பதியின் குழந்தைகளுக்கு ஜெ. ரூ.1 லட்சம் உதவி
சென்னை:
சமீபத்தில் ஒரு விபத்தில் உயிரிழந்த திருப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவிவழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
திருப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 17ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாகஉயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களுடைய குழந்தைகள் இருவரும் அநாதையாகினர்.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் நான்கு வயதுக்கும் கீழ் தான் இருக்கும். இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்குஉதவ வேண்டும் என்று அவர்களுடைய தாத்தா ஆரோனும் பாட்டி பழனியம்மாளும் கோயம்புத்தூர் மாவட்டகலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதை நேரடியாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் கலெக்டர்.
கலெக்டரின் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அந்தக் குழந்தைகள் இருவருக்கும் தலாரூ.50,000 வழங்க உத்தரவிட்டார்.
மேலும் அந்தக் குழந்தைகளின் தாத்தா மற்றும் பாட்டியை இன்று நேரடியாக வரவழைத்த முதல்வர், அவர்களிடமேரூ.1 லட்சத்திற்கான இரண்டு செக்குகளை வழங்கினார்.
முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த உதவி அளிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் என்ற அதிமுக பிரமுகரின்குடும்பத்தினருக்கும் ரூ.50,000 வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.
-->