ஒசூரில் 3 சகோதரிகள் தற்கொலை: கழுத்தை நெரித்து குழந்தை கொலை
ஒசூர்:
ஒசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாகஅவர்கள் 3 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
ஒசூரைச் சேர்ந்த அண்ணாத்துரை (35) என்பவர் அங்கு ஒரு மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சவிதா(25) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு லிகிதா என்ற 3 வயதுப் பெண் குழந்தை உண்டு. இவளுக்கு நேற்று காது குத்தும் நிகழ்ச்சிநடைபெறவிருந்தது.
இதற்காக சவிதாவின் தங்கைகளான அனிதா (23) மற்றும் விஜயலட்சுமி (20) ஆகியோர் ஒசூர் வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மருந்துக் கடையை மூடிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் அண்ணாத்துரை.
லேசாக மூடியிருந்த கதவைத் திறந்து கொண்டு அவர் உள்ளே சென்று பார்த்த போது சவிதா, அனிதா மற்றும்விஜயலட்சுமி ஆகிய மூன்று பேரும் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அண்ணாத்துரைஅதிர்ச்சி அடைந்தார்.
தரையில் லிகிதா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாள். அருகிலிருந்த ஒரு கடிதத்தில் "எங்கள்சாவுக்கு யாரும் காரணமில்லை" என்று எழுதி மூன்று பெண்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications