28 இந்திய மீனவர்கள் கைது: பாக். கடற்படை அட்டகாசம்
கராச்சி:
தங்கள் கடல் எல்லையில் மீன் பிடித்ததாகக் கூறி 28 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் கைதுசெய்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு அப்பால் கடல் பகுதியில் 28 இந்திய மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக ரோந்து வந்து கொண்டிருந்த பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களைச்சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைதான 28 இந்திய மீனவர்களும் பின்னர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் வாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதத் துவக்கத்திலேயே 216 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.
ஆனால் அவர்கள் இன்னும் அங்கேயே சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய படகுகள்மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.
படகுகளைச் சரிசெய்த பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான்அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications