உற்சாகத்துடன் கொண்டப்பட்ட ரம்ஜான் பண்டிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சென்னையில் மெரீனா கடற்கரையில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர். அதேபோல, திருவல்லிக்கணிே, அண்ணா சாலை, ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்கள்,மசூதிகளிலும் சிறப்புத்தொழுகை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆயிரம் விளக்குப் பள்ளிவாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில்ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். அண்டை வீடுகளில்வசிக்கும் இந்து, கிருஸ்துவ மக்களுடன் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

திருச்சியில் ஈத்காவில் நடந்த சிறப்புத் தொழுகையில் மத ஒற்றுமையைக் காக்கவும் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் இஸ்லாமியஇளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக ஷாவல் மாதத்து புது நிலவு நேற்றிரவு தமிழகத்தில் தென்பட்டதால் இன்று (வெள்ளிக்கிழமை) ரம்ஜான்பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி டாக்டர் சலாவுதீன் முகம்மது அயூப் கூறியிருந்தார்.

இதேபோல, அரசு தலைமை ஷியா காஜி குலாம் அகமது அஸ்கரியும் இன்று ரம்ஜான் கொண்டாடலாம் எனஅறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+