சட்ட மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை கமிஷனுக்கு புதிய தலைவர் நியமனம்
சென்னை:
சென்னை சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் புகுந்து போலீஸார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரிக்கஅமைக்கப்பட்ட கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பக்தவச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் போலீஸார் புகுந்துஅங்கிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்நடத்தினர்.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அலி முகம்மது தலைமையில் விசாரணைக் கமிஷன்அமைக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அலி முகம்மது மரணமடைந்தார்.
இதையடுத்து இந்தக் கமிஷனுக்கு புதிய தலைவராக பக்தவச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். 3 மாதங்களுக்குள்விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-->