தலித் பிரிவு தலைவர் வெளிநடப்பு: காங். செயற்குழுக் கூட்டத்தில் பரபரப்பு
சென்னை:
சென்னையில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தலித் மக்களுக்கு போதுமானபிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பதைக் கண்டித்து தலித் பிரிவுத் தலைவர் காமராஜ் வெளிநடப்பு செய்தார்.
தமிழக காங்கிரஸ்கட்சியின் செயற்குழுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அகில இந்திய பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா, செயலாளர் ஜி.கே. வாசன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், மணி சங்கர அய்யர் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தலித் மக்களுக்கு கட்சி நிர்வாகப் பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்றுகூறிய எஸ்.சி., எஸ்.டி பிரிவு முன்னாள் செயலாளர் காமராஜ், இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம்புகார் கொடுக்கப் போவதாக கூறி விட்டு வெளிநடப்புச் செய்வதாக கூறி வெளியேறினார்.
இதனால் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
கூட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படக் கூடாது, நீலகிரியில் உற்பத்தியாகிகேரளா வழியாக தமிழகத்திற்குள் வரும் பவானி நதியின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள் பாதிக்கப்படும். இதைத் தடுக்க தமிழக அரசுவிரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்,நதிகளை இணைப்பது தொடர்பான திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் பா.ஜக, அதிமுக தவிர்த்த மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் தலைமையில்மதச்சார்பற்ற கூட்டணியை அமைப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ரமேஷ் சென்னிதாலா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் எதுவும் இல்லை. அப்படி இருந்தால் கட்சி மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
கோஷ்டிப் பூசலில் ஈடுபடுவோர், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடப்போர் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கையைசந்திக்க வேண்டியது வரும் என்றார் சென்னிதாலா.
-->