1,017 படிகளை உருண்டவாறே ஏறி, இறங்கிய பக்தர்கள்
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளமலையின் 1,017 படிகளையும் உருண்டு கொண்டே ஏறி, இறங்கி நேர்த்திக் கடனை இரண்டு பக்தர்கள்நிறைவேற்றியுள்ளனர்.
இந்த இருவரில் ஒருவர் ரங்கராஜன். 46 வயதாகும் இவர் கோவில் சார்பில் நடத்தப்படும் பக்தி வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருக்கிறார்.
கடந்த 18 ஆண்டுகளாக கோவில் படிகளில் உருண்டு கொண்டே ஏறி, பின்னர் உருண்டு கொண்டே இறங்கி வந்துதனது நேர்த்திக் கடனை செலுத்தி வருகிறார்.
ஒரு முறை உருண்டு சென்று திரும்ப 90 நிமிடங்கள் பிடிக்கிறதாம். இவ்வாறு செய்வதன் மூலம் மனதுக்கு நிம்மதிகிடைப்பதோடு, வேண்டுதலும் நிறைவேறுவதாகக் கூறுகிறார் ரங்கராஜன்.
மற்றொருவரான அய்யர்மலையைச் சேர்ந்த மணிகண்டன் இரண்டாவது முறையாக இப்படி நேர்த்திக் கடனைசெலுத்தியுள்ளார்.
இந்த நேர்த்திக் கடன் நிகழ்ச்சியை அப்பகுதி எம்.எல்.ஏவான சசிகலா தொடங்கி வைத்தார்.
-->