For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகை நதியை சுத்தப்படுத்த ரூ.192.53 கோடி ஒதுக்கீடு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

வைகை நதியை சுத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக ரூ.42.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சிகமிஷனர் ஏ. கார்த்திக் கூறினார்.

மதுரையில் ஓடிக் கொண்டிருக்கும் வைகை நதி பல இடங்களில் சாக்கடையாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.மேலும் பல இடங்களில் குப்பையும் சேர்ந்து நதியுடன் ஓடி வரும்.

இதையடுத்து மதுரை நதியைத் தூய்மைப் படுத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று மதுரையில்நிருபர்களிடம் கார்த்திக் கூறுகையில்,

வைகை நதியை சுத்தப்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.42.53 கோடி ஒதுக்கப்பட்டுள்து.

சுமார் 107.03 கி.மீ. தொலைவிற்கு பாதாளச் சாக்கடை அமைக்கப்படவுள்ளது. மேலும் சுமார் 13.8 கி.மீ.தொலைவிற்கு பைப்லைன்களும் அமைக்கப்படவுள்ளன.

இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2வது கட்டப் பணிகள் தொடங்கும். இதற்காக ரூ.150 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.

வைகை நதியை சுத்தப்படுத்துவதற்காக மத்திய அரசு மட்டும் ரூ.80 கோடி அளிக்கிறது. பொதுமக்களிடமிருந்துரூ.20 கோடி வரை வசூலிக்கப்படும்.

மேலும் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் சேர்ந்து ரூ.10 கோடி வரை இந்தச் சுத்தப்படுத்தும்திட்டத்திற்கு அளிக்கவுள்ளனர் என்றார் கார்த்திக்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X