For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொள்ளாச்சி சிறையிலிருந்து தப்பிய கைதி சென்னையில் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து தப்பிய அஷ்ரப் என்ற கைதி மும்பையிலிருந்த சென்னை வந்தபோது கைதுசெய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து மூன்று கைதிகள் தப்பினர். அவர்களில் இருவரைஅடுத்த நாளே பொள்ளாச்சியில் வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அஷ்ரப் என்பவர் மட்டும்பிடிபடவில்லை.

இந்நிலையில், அஷ்ரப் மும்பைக்கு தப்பி விட்டதாகத் தெரிய வந்தது. அவரை மடக்கிப் பிடிக்க முடிவு செய்தபோலீஸார் சென்னையில் உள்ள அவரது தந்தை இஸ்மாயிலை அணுகினர்.

அவரும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினார். உடனே மும்பைக்குத்

தொடர்பு கொண்டு, தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறினார்.

இதை நம்பிய அஷ்ரப் அங்கிருந்து சென்னை வந்தார். அப்போது தனிப்படை போலீஸார் அஷ்ரப்பை மடக்கிப்பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அவர் பொள்ளாச்சி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைதான அஷ்ரப்பை பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X