44 தமிழக மீனவர்கள் இன்று இலங்கையில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
நாகப்பட்டனம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 44 மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலைசெய்கிறது. அவர்கள் மாலையில் ராமேஸ்வரம் வந்து சேருகிறார்கள்.
நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 44 மீனவர்கள் அக்டோபர் மாதம் 28ம் தேதி இலங்கை கடல்எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி, இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்தது. இலங்கைசிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.
இதையடுத்து தமிழக அரசின் முயற்சியையடுத்து இந்த மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.
திங்கள்கிழமை காலை இலங்கை-இந்திய கடல் எல்லையில், இந்திய கடலோரக் காவல்படையிடம் இந்தமீனவர்களும், அவர்களது படகுகளும் ஒப்படைக்கப்படுகின்றன.
மாலையில் அனைத்து மீனவர்களும் ராமேஸ்வரம் வந்து சேருகிறார்கள். பின்னர் அவரவர் ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications