அரசுத் துறை சீர்திருத்தம்: ஜெ. தலைமையில் அமைச்சரவை ஆலோசனை
சென்னை:
அரசுத் துறைகளில் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுவாமிநாதன் கமிட்டியின்பரிந்துரைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஜெயலலிதா தலைமையில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இதில் அரசுத் துறைகளில் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுவாமிநாதன் கமிஷனின்அறிக்கை மற்றும் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
பின்னர் சமீபத்தில் நடந்து முடிந்த கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குஅமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
சில பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்குகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத்தெரிகிறது. தம்பித்துரைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்ட சம்பவத்தைத்தொடர்ந்துதான் அவருடைய அமைச்சர் பதவி பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications