உலக அமைதிக்காக தொடர்ந்து 168 மணி நேரம் "பத்மாசனம்"
Subscribe to Oneindia Tamil
மதுரை:
உலக அமைதிக்காக தொடர்ந்து 168 மணி நேரம் "பத்மாசனம்" செய்யும் முயற்சியில் மதுரையைச் சேர்ந்த ஒருவர்ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாடு யோகாசனா சங்கத்தின் பொதுச் செயலாளரான என். ராமலிங்கம் என்பவர்தான் இம்முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.
"தியான வேள்வி" என்று அழைக்கப்படும் இந்தச் சிறப்பு யோகாசன யாகத்தை கடந்த 24ம் தேதி மாலை 6மணிக்குத் தொடங்கினார் ராமலிங்கம்.
யோகாசன வகைகளில் ஒன்றான "பத்மாசனம்" போஸில் கால்களை மடக்கி அமர்ந்துள்ள ராமலிங்கம், தொடர்ந்து168 மணி நேரம் அதே போலவே உட்கார்ந்திருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அதாவது வரும் 31ம் தேதி மாலை 6 மணியுடன் அவர் தன்னுடைய "பத்மாசன"த்தை முடித்துக் கொள்வார்.
உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்று அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடுயோகாசன சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications