ஆந்திரக் கொள்ளையர்கள் மீண்டும் அட்டகாசம்: 12 சென்னை மீனவர்கள் கடத்தல்
சென்னை:
சென்னை-காசிமேட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை ஆந்திரக் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.ரூ.18,000 பணம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
காசிமேட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் இரண்டு விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால்அவர்கள் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் விசைப் படகுகள் சங்கத்தின் தலைவர் குப்பனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆந்திராவின்சாக்கிசாலா பகுதியைச் சேர்ந்தவர் என்று தம்மைக் கூறிக்கொண்டார் தொலைபேசியில் பேசிய நபர்.
சென்னை மீனவர்கள் தங்கள் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாகவும், தங்களுடைய படகுகளையும்,மீன்பிடி வலைகளையும் கூட அவர்கள் அறுத்து எறிந்து விடுவதாகவும் அந்நபர் புகார் கூறினார்.
எனவேதான் தற்போது இரண்டு விசைப் படகுகளையும், அதிலிருந்த 12 பேரையும் பிடித்து வைத்துள்ளோம்.அவர்களையும் படகுகளையும் திரும்பி அனுப்ப வேண்டுமானால் ரூ.18,000 கொடுக்க வேண்டும் என்றும்அந்நபர் மிரட்டி விட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து சென்னை மீனவர்கள் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
-->