தைப்பூசம்: பழனியை நோக்கி லட்சக்கணக்கானவர்கள் பாதயாத்திரை
Subscribe to Oneindia Tamil
பழனி:
முருகனின் படை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை தைப்பூசத் திருவிழா நடக்கிறது.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாக பழனிக்கு வரஆரம்பித்துள்ளனர்.
வரும் 17ம் தேதி வெள்ளி ரத யாத்திரையும், 18ம் தேதி தைப்பூசமும் நடக்கிறது. 21ம் தேதி தெப்பத் திருவிழாவுடன் தைப்பூசத்திருவிழா முடிவுக்கு வருகிறது.
காவடிகள் ஏந்தி, முருக கோஷத்துடன் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியரும் பழனியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications