கந்து வட்டி வசூலிக்கும் போலீசார்: டி.ஜி.பியிடம் காங்கிரஸ் புகார்
சென்னை:
தர்மபுரி மாவட்ட மக்களை ஆட்டிப் படைக்கும் கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவு கட்டுமாறும், இதில்ஈடுபட்டுள்ள போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலனுக்கு, தமிழககாங்கிரஸ் கட்சியின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் எஸ். ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ஜி.பிக்கு அவர் அளித்துள்ள மனுவில்,
தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் நடந்து வரும் இந்தக் கொடுமைகளை சில போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்துசெய்து வருவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.
குறிப்பாக தர்மபுரி டி.எஸ்.பி. அலுவலகம் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் கட்டப் பஞ்சாயத்துக்காரர்களின் தலைமைஅலுவலகம் போலவே செயல்பட்டு வருகிறது என்று ராமநாதன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆவண செய்வதாக ராஜகோபாலன் உறுதியளித்துள்ளதாக ராமநாதன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->