-வங்கிகள் பாதுகாப்பை மேம்படுத்த போலீஸ் திட்டம்
சென்னை:
வங்கிப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்த காவல்துறை பயிற்சி அளிக்கஉள்ளது.
வங்கிகளில் பெரும்பாலும் முன்னாள் ராணுவத்தினரும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களும் தான் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராணுவத்தில் போர்ச் சூழலில் பணிபுரிய இவர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. ஆனால், முக்கிய சாலைகளில் வங்கியைப் பாதுகாக்கதனிப்பட்ட பயிறிசி இவர்களுக்கு இல்லை. இதனால் பல வங்கிகளில் காவலர்கள் இருந்தும் கூட கொள்ளைகளைத் தடுக்க முடியவில்லை.
இதனால் இவர்களுக்கு அது தொடர்பான குறிப்பிட்ட பயிற்சி அளிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் உள்ளவங்கிக் காவலர்களுக்கு இப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை நகர காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் இடையே ஆலோசனைக் கூட்டம் நடந்தது.வங்கிகளில் கொள்ளை, திருட்டு போன்றவற்றை தடுக்கும் பொருட்டு நவீன பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்துவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
குறி தவறாமல் சுடுவது குறித்து வங்கிக் காவலர்களுக்கு முக்கியமாக பயிற்சி அளிக்கப்படும்.
வங்கிகளில் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள், போலீஸ் நிலையத்துடன் ஹாட்லைன் போன்கள், போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்கும்அகச்சிவப்பு கதிர் கருவிகள் உள்ளிட்ட நவீன வசதிகளைச் செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
-->