For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா அக்காள் மகனின் பெயரைக் கூறி மோசடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரனின் பெயரைக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னையில் ரியல் எஸ்டேட் ஏஜென்டாக இருப்பவர் நெடுமாறன். புத்தாண்டு தினத்தன்று, நெடுமாறனும் அவரது நண்பர்கள் சிலரும் ஒருகல் குவாரி உமையாளரை அணுகியுள்ளனர்.

தான் பாஸ்கரனின் தனி செயலாளர் என்றும், தனது நண்பர் அய்யாத்துரையிடம் வாங்கிய கடனை விரைவில் அடைக்காவிட்டால் நடப்பதேவேறு என்றும் அவரிடம் மிரட்டியுள்ளார் நெடுமாறன்.

நெடுமாறன் குறித்து சந்தேகம் அடைந்த குவாரி உமையாளர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார்போயஸ் தோட்டத்தில் விசாரித்தனர். அப்போது நெடுமாறன் என்று யாரும் பாஸ்கரனுக்கு செயலாளராக இல்லை என்று தெரிந்தது.

இதையடுத்து நெடுமாறனை போலீசார் அவரது வீட்டில் சென்று கைது செய்து இழுத்துச் சென்றனர். அய்யாத்துரையும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த இருவர் மீதும் கடத்தல் முயற்சி, மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X